×

சிங்கப்பூரில் கப்பலில் இருந்து தவறி விழுந்த இந்திய பெண் பலி

சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த ஜக்கேஷ் சகானி(70) மற்றும் அவரது மனைவி ரீட்டா சகானி (64) ஆகியோர் சிங்கப்பூர் நாட்டில் சொகுசு கப்பல் ஒன்றில் நான்கு நாள் சுற்றுபயணம் சென்றிருந்தனர். கடந்த திங்கள்கிழமையன்று ரீட்டா சகானி எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்து விட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஜகேஷ் சகானியின் மகன் விவேக் சகானி இன்ஸ்டாகிராமில் பதிவிடுகையில், என்தாயும், தந்தையும் பயணம் செய்த சொகுசு கப்பலின் சிசிடிவி காட்சிகளை பார்த்தேன். அதை பார்த்த பின்னர் அவர் இறந்து விட்டதை தெரிந்து கொண்டேன் என பதிவிட்டுள்ளார். பெண்ணின் உடலை மீட்க சிங்கப்பூர் கடற்படை, கடலோர காவல் படையுடன் சேர்ந்து, 22 வர்த்தக கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

The post சிங்கப்பூரில் கப்பலில் இருந்து தவறி விழுந்த இந்திய பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Singapore ,Jakesh Sakhani ,Rita Sakhani ,India ,
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...